புனித அல் குர்ஆனில் இருந்து சில சூறாக்களை, குறிப்பிட்ட சில ஆயத்துக்களை வாப்பா தவறாமல் ஓதி வருவார். அவதானித்து இருக்கிறேன். தொழுது முடிந்தவுடன் அவர் சூறா யாசீனை ஓதி முடிப்பார். எழுந்து வரும் பொழுது அஸ்மா உல் ஹுஸ்னாவை முனுமுனுத்தபடி வருவார். சைக்கிளை எடுப்பார். ஓதியவாறே என்னையும் ஏற்றிக் கொண்டு மிதி வண்டியை மிதித்து மிதித்து செல்லத் துவங்குவார். அவர் ஓதி முடியும்வரை பேசுவதற்கு காத்திருப்பேன்.
